நெஞ்சை உலுக்கும் கொடூரம்... 14 வயது பட்டியலின சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு... கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு.!



14-year-old-scheduled-caste-student-gang-raped-her-body

ஆந்திராவில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 14 வயது சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.

ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பட்டியலினச் சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்  லோகேஷ் என்பவர் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். மேலும் சிறுமியை  தனியாக சந்திக்க வேண்டும் எனக் கூறி லாட்ஜுக்கு அழைத்து சென்ற அவர்  தனது உறவினரான நரேந்திரன் என்பவருடன் சேர்ந்து  சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார் .

andha pradeshஇதனைத் தொடர்ந்து சிறுமியை  அவரது வீட்டிற்கு அருகே டிராப் செய்துவிட்டு  அந்த இளைஞர் சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக லோகேஷ் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்  லோகேஷ் மற்றும் அவரது உறவினர் நரேந்திரனை கைது செய்து விசாரித்த போது  சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததை ஒப்புக்கொண்டனர். ஆனால் வீட்டிற்கு அருகே  விட்டுச் சென்றதாக தெரிவித்தனர்.

andha pradeshஇந்நிலையில் மொவ்வா மண்டலம் சூரசனிப்பள்ளி பயிர் கால்வாயில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மன உளைச்சல் காரணமாக கால்வாயில் குதித்து சிறுமி தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லோகேஷ் மற்றும் நரேந்திரன் ஆகியோரின் மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு, தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி மற்றும் எஸ்டி தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.