10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள், மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் செய்த கேவலமான செயல்.!

10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர்கள், மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் செய்த கேவலமான செயல்.!


12'th students raped 10'th std girl

பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவியை அதே பள்ளியை சேர்ந்த சக
மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததோடு,அதனால் உருவான கருவை கலைக்க பள்ளி நிர்வாகமே மாத்திரை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிட பள்ளியின் விடுதியில் பல்வேறு மாணவ மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு  மாணவர்கள் 4 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் மாணவிக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த நிலையில் பள்ளி நிர்வாகி மற்றும் விடுதி பாதுகாப்பாளர் ஆகியோர் பள்ளியின் பெயர் கெட்டுப்போய் விட கூடாது என்பதற்காக மாணவியின் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர்

மேலும் அதற்காக மாணவியை கட்டாயப்படுத்தி அவருக்கு மாத்திரைகளும் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். பின்னர் பள்ளி ஹாஸ்டலுக்கு பெற்றோர்கள் மாணவியை அழைத்து கொண்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் பள்ளி நிர்வாகி, விடுதி வார்டன் காவலர் உள்ளிட்ட 5 பேர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பலாத்காரம் செய்த அந்த நான்கு மாணவர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.