பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலைக்கு பழிக்குப்பழி.! 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை.! கொடூரச் சம்பவம்.!
பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலைக்கு பழிக்குப்பழி.! 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை.! கொடூரச் சம்பவம்.!
மேற்கு வங்காள மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாதுஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் பாதுஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கரதாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதுஷேக் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன், அவரது சொந்த கிராமமான பாக்துய் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரத்தில் அதே கிராமத்தில் சிலரின் வீடுகளுக்கு தீவைத்தனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. அதன் பிறகு வீடுகளுக்குள் தேடி பார்த்ததில், தீயில் கருகி இறந்த நிலையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
தீயில் கருகி இறந்தவர்களில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி விட்டதாகவும் ஒரு வீட்டிலிருந்து மட்டும் 7 உடல்கள் கைப்பற்றபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராமத் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழி நடந்த கொடூரச்சம்பவம் நாடுமுழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.