தூக்கத்தால் நேர்ந்த துக்கம்.! ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை பரிதாப பலி..! உச்சகட்ட சோகத்தில் திரையுலகினர்.!

தூக்கத்தால் நேர்ந்த துக்கம்.! ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை பரிதாப பலி..! உச்சகட்ட சோகத்தில் திரையுலகினர்.!



young-actress-died-fall-down-from-train

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்தவர் ஜோதி ரெட்டி. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஐதராபாத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் ஆந்திராவில் சங்ரந்தி பண்டிகை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் நடிகை ஜோதி ரெட்டி சொந்த ஊரில் சங்ரந்தி பண்டிகையை கொண்டாடிவிட்டு ஐதராபாத்துக்கு சென்றுள்ளார். ரயில் மூலம் இவர் ஐதராபாத் சென்றபோது ரயிலில் அசந்து தூங்கியுள்ளார். அப்போது தூக்க கலக்கத்தில் கச்சிகூடா ஸ்டேஷனில் ரயில் நிற்கின்றது என நினைத்து ஷாட்நகர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது ரயில் நிலையத்தில் உள்ள ரயில்நிலையம் பெயரை பார்த்ததும், தான் தவறான ரயில்நிலையத்தில் இறங்கி விட்டதை உணர்ந்த ஜோதி ரெட்டி, மீண்டும் அதே ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டுள்ளது. உடனடியாக பதட்டத்தில் ஓடி சென்று அவர் அதே ரயிலில் ஏற முயன்றபோது தவறி பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜோதி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சோக சம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.