கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை உசுப்பேத்தும்படி யாஷிகா கேட்ட கேள்வி!! அனல்பறக்கும் பதில்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை உசுப்பேத்தும்படி யாஷிகா கேட்ட கேள்வி!! அனல்பறக்கும் பதில்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!


yaashika-questioned-to-fans-from-posting-photo

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.  இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார்.

இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.

yashika

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும்  சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் பிக்பாஸ் இருந்து வெளியேறிய யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் , தலைகுனிந்து கீழே வெட்கப்பட்டு பார்த்தபடியும், கண்ணை திறந்து மேலே பார்த்தபடியும் இருபுகைப்படத்தை வெளியிட்டு இடதா? வலதா? என கேட்டுள்ளார். இதற்கு பலரும் பலவிதமாக பதிலளித்து வருகின்றனர்.