என் கணவரை காணவில்லை.. அழுது புலம்பிய மனைவி! சமையலறையில் போலீசார் கண்ட அதிர்ச்சி காட்சி! பகீர் பின்னணி!!
என் கணவரை காணவில்லை.. அழுது புலம்பிய மனைவி! சமையலறையில் போலீசார் கண்ட அதிர்ச்சி காட்சி! பகீர் பின்னணி!!
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரெய்ஸ் ஷேக். இவரது மனைவி ராஷிதா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஷிதாவுக்கு அதே பகுதியில் வசித்து வந்த அமித் விஸ்வகர்மா என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது .இதுகுறித்து அவரது கணவர் ரெய்ஸுக்கு தெரிய வந்த நிலையில் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் அமித் விஸ்வகர்மாவுடனான உறவை கைவிடுமாறும் கூறி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ராஷிதா தனக்கு இடைஞ்சலாக இருக்கும் கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். பின்னர் ராஷிதா தனது கணவன் ரெய்ஸ் தூங்கிகொண்டிருந்தபோது தனது காதலனை வரவழைத்து இருவரும் சேர்ந்து ரெய்ஸின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த சடலத்தை சமையலறையிலேயே புதைத்து புதிய டைல்ஸ் போட்டு மூடியுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து ஒன்றும் நடக்காததுபோல ராஷிதா தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது வீட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டபோது சமையல் அறையில் மட்டும் புதிய டைல்ஸ் போட்டிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் அங்கு தோண்டி பார்த்தபோது ரெய்ஸ் சடலம் கிடைத்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் கொலைக்கு துணையாக இருந்த அவரது காதலனையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.