நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுமா? தற்போதைய நிலவரம் என்ன?
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுமா? தற்போதைய நிலவரம் என்ன?
இன்றைய திரையுலகில் அதிகம் பேசப்படும் காதல் ஜோடிகளாக வளம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். பல சர்ச்சைகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வி பலரின் மனதில் இருந்து வருகிறது.
காரணம், இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணம், ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பிரபலங்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்ற தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு பரவியது. ஆனால் நயன்தாரா தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்டு இருக்கிறார்.
நிச்சயம் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவிற்கு திரையுலகில் இருக்கும் மவுசு குறைந்துவிடும். அதனால் என்னவோ திருமணத்தை அவர்கள் தள்ளி பொடிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’தர்பார்’ படத்திலும் அதன் பின்னர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் ’நெற்றிக்கண்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்கனவே கசிந்த தகவல் படி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறுவது சந்தேகமே என தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் என முடிவு எடுத்துள்ளார்கள் என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கவில்லை.