இதனால் தான் நடிகர் விவேக்கிற்கு சிகிச்சை பலனளிக்கவில்லை.! மருத்துவமனை கொடுத்த விளக்கம்.!
இதனால் தான் நடிகர் விவேக்கிற்கு சிகிச்சை பலனளிக்கவில்லை.! மருத்துவமனை கொடுத்த விளக்கம்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் ராஜூ சிவசாமி கூறுகையில், நடிகர் விவேக் நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது விவேக்கிற்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை. உடல்நிலையை பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவரது இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.