எனது படங்களில் எனக்கு சாபமாக அமைந்தது இந்த ஒரு படம் தான்!! விஜய்சேதுபதி ஓபன் டாக்..

எனது படங்களில் எனக்கு சாபமாக அமைந்தது இந்த ஒரு படம் தான்!! விஜய்சேதுபதி ஓபன் டாக்..


vijay-sethipathi-talks-about-labam-movie

நான் செய்த புண்ணியமும், எனது சாபமும் இந்த ஒரு படம் தான் என பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்தி, முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் விஜய் சேதுபதி. தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துவரும் இவர் 'லாபம்' படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை விஜய் சேதுபதி தயாரித்து, அதில் நடித்தும் இருந்தார்.

படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் உயிரிழந்தார். இந்த நிலையில் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் அவரது முழு உருவ சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த சிலை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் நல்லகண்ணு ஆகிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

vijay sethupathi

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் என்றால் அது இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய கடைசி படமான ’லாபம்’ படத்தை தயாரித்ததுதான். ஆனால் எனக்கு கிடைத்த சாபம் என்னவென்றால் அதுவே அவருடைய கடைசி படமாக அமைந்தது தான்" என பேசியுள்ளார்.