அஜித்துடன் நடிப்பிங்களா? விஜய்யுடன் நடிப்பிங்களா? பிரபல நடிகை சடார் பதில்!
அஜித்துடன் நடிப்பிங்களா? விஜய்யுடன் நடிப்பிங்களா? பிரபல நடிகை சடார் பதில்!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்தவருடம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்னற்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார்.
அதை தொடர்ந்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் 'கலியூஞ்சல்' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'ஒரு வடக்கன் செல்பி' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது சற்று உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன். இதனால் தற்போது பட வாய்ப்புகளுக்காக உடலை குறைத்து வருகிறார். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகை மஞ்சுமா, கீர்த்தி சுரேஷுக்கு சர்ப்ரைஸாக போன் செய்திருந்தார்.
அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் போனில் நடிகை மஞ்சிமாவிடம், அஜித்-விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டார்.அதற்கு கொஞ்சம் கூட தாமதம் இன்றி விஜய்யுடன் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.