தலைவி நயன்தாராவோடு எப்போதான் கல்யாணம்? அசால்டாக விக்னேஷ் சிவன் என்ன சொல்லிட்டார் பார்த்தீர்களா!
தலைவி நயன்தாராவோடு எப்போதான் கல்யாணம்? அசால்டாக விக்னேஷ் சிவன் என்ன சொல்லிட்டார் பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது, நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்வது, ஒன்றாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது என பிஸியாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் கேள்விகளை எழுப்பி வருவர். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் உங்களது திருமணம் எப்பொழுது என கேள்வி எழுப்பிதற்கு அவர், இதுவரை இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். மூன்று மாதத்துக்கு ஒருமுறை எங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.
தற்போது எங்களது கவனமெல்லாம் வேலையில்தான் உள்ளது. லவ் எப்ப போர் அடிக்குதோ அப்பொழுது கல்யாணம் செய்து கொள்வோம். அந்த நேரம் வரும்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.