திருமணத்திற்கு பின் ஸ்பெஷலான பர்த் டே.! காதல் பொங்க விக்னேஷ் சிவன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள்!!

திருமணத்திற்கு பின் ஸ்பெஷலான பர்த் டே.! காதல் பொங்க விக்னேஷ் சிவன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள்!!


vignesh-shivan-nayanthara-romantic-photos-viral

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம்  திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமணமான 4வது மாதத்தில் விக்னேஷ் சிவன், தானும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிவிட்டதாக அறிவித்தார். இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது. 

 திருமணமான 4வது மாதத்திலேயே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுகொண்டது பெரும் சர்ச்சையானது. பின் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்கள் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே குழந்தை பெற்றுகொண்டதாகவும் அறிவித்துள்ளனர். 

நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து கூறி விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்த ரொமான்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.