#Breaking: செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்தது - அதிகாரபூர்வ அறிவிப்பு.!



Tamil serial actress baby

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செவ்வந்தி நெடுந்தொடரில் நடித்து வந்த நடிகை திவ்யா ஸ்ரீதர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செல்லமா தொடரின் நாயகன் அர்னவ் தன்னை ஏமாற்றி காதலித்து, திருமணம் செய்வதாக ஏமாற்றி கைவிட்டதாக புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருதரப்பு விசாரணை நடத்தி வந்தாலும், அர்னவ் வழக்கில் ஜாமின் பெற்று வழக்கை சந்தித்து வருகிறார். தொடர்ந்து செல்லம்மா தொடரிலும் நடித்து வந்தார். விசாரணையில், திவ்யா ஸ்ரீதருக்கு 6 வயது குழந்தை இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இருவருக்கும் இடையேயான பிரச்சனை மற்றும் பிற விவகாரங்கள் குறித்து சமூக வலைத்தளத்திலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. பல கண்டன குரல்கள் எழுந்தன. 

இந்நிலையில், வளைகாப்பு முடிந்த நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தள்ளாதவது, "கடைசி வரை என் குழந்தையுடன் நான் இருப்பேன். 

நான் உனக்கு கதைகள் சொல்லுவேன். எனது வாழ்க்கையில் நீ எனக்கு கிடைத்த மிகப்பெரிய அன்பு, பரிசு, அர்த்தம் என அனைத்திலும் அடங்கும். எனக்கு இன்று வரை உறுதுணையாக அன்போடு, தைரியம் ஏற்படுவதும் வகையில் உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்களின் ஆசிர்வாதத்துடன்" என்று பதிவிட்டுள்ளார்.