என் பிள்ளைங்க தவிச்சுபோய்ட்டாங்க! சும்மா விடமாட்டேன்! வனிதாவிற்கு எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக சூர்யாதேவி வெளியிட்ட வீடியோ!

என் பிள்ளைங்க தவிச்சுபோய்ட்டாங்க! சும்மா விடமாட்டேன்! வனிதாவிற்கு எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக சூர்யாதேவி வெளியிட்ட வீடியோ!


surya-devi-post-video-to-warning-vanitha

நடிகை வனிதா கடந்த மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இதற்கு மோசமாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தனது கணவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், நடிகை வனிதாவிற்கு எதிராகவும் நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கூறி வந்தனர். 

Surya devi

 இந்நிலையில் சூர்யாதேவி என்ற பெண் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்தும், அவரைக் குறித்து மோசமாக பேசியும் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் வனிதாவும் மிக தரக்குறைவாக பேசி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவியை வடபழனி மகளிர் போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த சூர்யா தேவி மீண்டும் வனிதாவிற்கு எச்சரிக்கை விடுப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது யூடியூபில் வெளியிட்டுள்ளார். அதில் போலீசார்கள் தன்னை விசாரணைக்காக என அழைத்துச் சென்று கைது செய்துவிட்டனர். அப்பொழுது எனக்கு சாத்தான்குளம் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. மேலும் நான் தொடர்ந்து எனது வேலைகளை செய்துக்கொண்டேதான் இருப்பேன். எதற்கும் பின்வாங்க மாட்டேன். யாரிடமும் மன்னிப்பும்  கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் எனது குழந்தைகளை பற்றி நீ கவலைப் பட தேவையில்லை அதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை என ஆவேசமாகவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.