"அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்" நடிகை ஆன்ட்ரியாவின் ஓபன் டாக்.!?
கொரோனா சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் தற்போதைய நிலை! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
கொரோனா சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் தற்போதைய நிலை! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு நினைவு திரும்பிவிட்டதாகவும் சமீபத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி பாலசுப்ரமணியன் தொடந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் உள்ளார்.
மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. நல்ல விழிப்புடன், சொல்வதைப் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளார். ஃபிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.