காலமானார் சங்கீத ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியம்! சோகத்தில் மூழ்கிய திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!
காலமானார் சங்கீத ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியம்! சோகத்தில் மூழ்கிய திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தபோதிலும் கடந்த மாதம் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் உடல் நலம் நன்கு தேறி வந்தது. இந்நிலையில் திடீரென நேற்று எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.
இந்தநிலையில் சங்கீத ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.