கேன்சரிலிருந்து மீண்ட பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கேன்சரிலிருந்து மீண்ட பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழில் பம்பாய், காதலர் தினம் கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட் நடிகையான இவர் ஹிந்தியில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து அவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்
இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில் சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த வந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது குணமாகி மன தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் புதுப்பொலிவுடன் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சிகிச்சையின் போது ஏற்பட்ட தழும்புகள் மாறாமல் இருப்பதை குறிப்பிட்டு பதிவையும் வெளியிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,