அடக்கடவுளே.! பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா.! அவரே உடைத்த உண்மைகள்!!
அடக்கடவுளே.! பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா.! அவரே உடைத்த உண்மைகள்!!
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த செல்லுலாய்டு என்ற படத்தில் பாடியதன் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர் தமிழில் குக்கூ படத்தில் இடம்பெற்ற "கொடையில மழை போல " என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். மேலும் அவர் மாபெரும் ஹிட்டான சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடலை பாடியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
பாடகி விஜயலட்சுமிக்கு முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் அப்பொழுது மாப்பிள்ளை ஏகப்பட்ட கண்டிஷன் போட்ட நிலையில் விஜயலட்சுமி திருமணத்தை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும், இன்டீரியர் டெகரேட்டருமான அனூப் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அவர் கூறியதாவது, என்னை திருமணம் செய்தவர் பயங்கர சாடிஸ்ட் என்பது நாளாக ஆகதான் தெரிந்தது. அவர் என்னுடைய குறைகளை மட்டுமே கண்டுபிடித்து சுட்டிக்காட்டி வந்தார்.
என் பெற்றோரை என்னிடம் இருந்து பிரித்தார். அதுமட்டுமின்றி என் பாடல் தொழிலை செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். என்னால் அதனை எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. பாடல்கள் இல்லாத வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.