போதும்.. நானும் மனுஷன்தான்! சூப்பர் சிங்கர் 8 சர்ச்சையால் முக்கிய பிரபலம் எடுத்த அதிரடி முடிவு! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

போதும்.. நானும் மனுஷன்தான்! சூப்பர் சிங்கர் 8 சர்ச்சையால் முக்கிய பிரபலம் எடுத்த அதிரடி முடிவு! செம ஷாக்கில் ரசிகர்கள்!!


Singer benny thayal tweet about super singer 8

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமா துறையில் பின்னணி பாடகர்களாக உள்ளனர். இதன் 8வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம், எஸ்பிபி சரண், பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர்.  மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா காமெடியாக தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்தநிலையில் அண்மையில் போட்டியாளரான ஸ்ரீதர் சேனா எலிமினேட் செய்யப்பட்டார். அவரது குரலுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்தநிலையில் அவரது எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. மேலும் இது சர்ச்சையான நிலையில் நெட்டிசன்கள் பலரும் நடுவர்களை கடுமையாக வறுத்தெடுக்க துவங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடுவர் பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அவ்வளவு வெறுப்பான கமெண்டுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் உங்களைப் பார்க்க மாட்டேன்  என பதிவிட்டுள்ளார். இவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.