இயக்குநர் ஷங்கர் வீட்டில் நேர்ந்த சோகம்.! கண்ணீரில் குடும்பத்தார்கள்.!

இயக்குநர் ஷங்கர் வீட்டில் நேர்ந்த சோகம்.! கண்ணீரில் குடும்பத்தார்கள்.!



shankar-mother-passed-away

பிரமாண்ட பட்ஜெட் படம் என்றாலே உடனே நினைவுக்கு வருபவர் இயக்குநர் ஷங்கர்தான். 'ஜெண்டில்மேன்' திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இயக்குனர் ஷங்கர் தற்போது 'இந்தியன் 2', ராம் சரண் தேஜா நடிப்பில் பன்மொழிப் படம் ஒன்று, இந்தியில் 'அந்நியன்' ரீமேக் என அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இயக்குநர் ஷங்கர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில், ஷங்கருடன் வசித்து வந்த அவரது தாயார் முத்துலட்சுமி வயது மூப்பின் காரணமாக இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். 


அவரது இறுதிச் சடங்கு நாளை புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 88 வயதாகும் இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.