நடிகை நிலானி தற்கொலை முயற்சி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
நடிகை நிலானி தற்கொலை முயற்சி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
சில நாட்களுக்கு முன்பு உதவி இயக்குனர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்துவதாக சின்னத்திரை நடிகை நிலானி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட லலித்குமார் உடலில் பெட்ரோல் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இறப்பதற்கு முன்பு லலித்குமார் நிலானியுடன் உல்லாசமாக இருக்கும் விடீயோவையும், புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் நிலானி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவர்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் செய்திகள் பரவின.
பின்னர் இதுதொடர்பாக நிலானியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று திடீரென நடிகை நிலானி இன்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதன்பின்னர் அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.