கொரோனாவால் இதெல்லாம் மாறிவிட்டது! இனி இப்படித்தான் இருப்பேன்! நடிகை சமந்தா எடுத்த அசத்தல் முடிவு!
கொரோனாவால் இதெல்லாம் மாறிவிட்டது! இனி இப்படித்தான் இருப்பேன்! நடிகை சமந்தா எடுத்த அசத்தல் முடிவு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ளார். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தும் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, எனக்கு இந்த கதாபாத்திரம் தான் ரொம்ப பிடிக்கும் என்பதெல்லாம் இல்லை. ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்பதற்காக நான் ஏற்கனவே நடித்தது போன்ற கதையில் மீண்டும் நடிக்கக் கூடாது என்பதில்தான் அதிகம் கவனமாக இருப்பேன்.
கொரோனா ஊரடங்கால் என்னால் எனது குடும்பத்துடன் அதிகளவு நேரத்தை செலவிட முடிந்தது. மேலும் இந்த கொரோனோவால் எனது எண்ணம், செயல் எல்லாம் மாறிவிட்டது. இனி எனக்கு சந்தோசத்தை கொடுக்கும் செயலை மட்டுமே செய்ய வேண்டும். அந்த விஷயங்களுக்காக மட்டுமே கஷ்டப்பட வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார். சமந்தா கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படங்கள் உள்ளன.