சமந்தா யாரை பார்த்து நடிக்க கற்றுக்கொண்டார் தெரியுமா??
சமந்தா யாரை பார்த்து நடிக்க கற்றுக்கொண்டார் தெரியுமா??
தமிழில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. தமிழகத்தில் சமந்தாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பானா காத்தாடி திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக அதர்வா நடித்திருந்தார். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.
பானா காத்தாடி படத்தை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். விஜய்யுடன் தேறி, மெர்சல் போன்ற படங்களிலும், விக்ரம் நடித்த 10 என்றதுக்குள்ள, சூர்யாவுடன் அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார் சமந்தா.
கவுதம் மேனன் இயக்கிய Ye Maaya Chesave தான் இவரது முதல் படம். இதில் நடித்தபோது தான் நாக சைதன்யாவுடன் சமந்தா காதலில் விழுந்தார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
சமந்தா வீட்டில் பழைய VCR கேசட்டுகள் அதிகம் இருக்குமாம், அதில் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களை பார்த்து தான் நடிப்பதையே கற்றுக்கொண்டதாக சமந்தா கூறியுள்ளார்.