அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
தேம்பி தேம்பி அழுத நடிகை சமந்தா. என்ன காரணம் தெரியுமா?
தேம்பி தேம்பி அழுத நடிகை சமந்தா. என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகைகளில் ஒருவர் சமந்தா. பானா காத்தாடி திரைப்டம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சமந்தா.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பிரபலமாக இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்து சமந்தா, நாகசைதன்யா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி.
படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்க்காக அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து ஒன்றைரை மணிநேரம் படத்தின் வெற்றிக்காகவும், கணவருக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளார் நடிகை சமந்தா.
மேலும் படம் வெற்றி என்ற முதல் செய்தியை கேட்டதும் தான் தேம்பி தேம்பி அழுததாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை சமந்தா.