தனது மூன்றாவது திருமணம் குறித்த ரகசியத்தை போட்டுடைத்த பிக்பாஸ் ரேஷ்மா! கடும் அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!

தனது மூன்றாவது திருமணம் குறித்த ரகசியத்தை போட்டுடைத்த பிக்பாஸ் ரேஷ்மா! கடும் அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!



reshma talk about third marriage

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அந்த படத்தில் இவர் நடித்த புஷ்பா என்ற கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார் . நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் தனக்கு இருமுறை திருமணமானது குறித்தும் தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டமான அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அது போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் ரேஷ்மா சமீபத்தில் நார் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரை ரேஷ்மா காதலித்து வருவதாகவும், அவரைத்தான் மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் ரேஷ்மா, எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பரவிவரும் அனைத்து செய்தியும் பொய்யானது, அதெல்லாம் வெறும் யூகம் மட்டும். தயவுசெய்து என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.