புஷ்பவனம் குப்புசாமி மகளை காணவில்லையா? பரபரப்புக்கு மத்தியில் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ!

புஷ்பவனம் குப்புசாமி மகளை காணவில்லையா? பரபரப்புக்கு மத்தியில் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ!



pushbaanam-kuppusamy-daughter-post-video

பிரபல நாட்டுப்புற பாடகராகவும்,  திரைப்பட பாடகராகவும் புகழ்பெற்று விளங்குபவர் புஷ்பவனம் குப்புசாமி. அவரது மனைவி அனிதா குப்புசாமி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் பல்லவி. அவர் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் ஒருவர் காவல் நிலையத்தில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டார். அவருக்கும், அவரது  சகோதரிக்கும் நேற்றிரவு சண்டை நடந்ததால் பல்லவி கோபமாக காரை எடுத்து சென்றுவிட்டார்.இன்னும்  வீடு திரும்பவில்லை. கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார். 

Anitha kuppusami

இதனை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் போலீசாருக்கு அவரை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. 

இந்நிலையில் பல்லவி அவரது பேஸ்புக் பக்கத்தில் நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போய் விட்டதாகவோ கூறி சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். நான் நலமாக இருக்கிறேன். போலியான செய்திகளை தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.  மேலும் இன்ஸ்டாகிராமில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.