என் மகளை அடிச்சே கொன்னுட்டாங்க! இது கொலைதான்.! துயரத்தில் கதறி துடித்த பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ராவின் தாய்!

என் மகளை அடிச்சே கொன்னுட்டாங்க! இது கொலைதான்.! துயரத்தில் கதறி துடித்த பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ராவின் தாய்!



pandian store chitra mother complaint against hemanth

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

மேலும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது. ஆனால் இதற்கிடையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இது கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகமும் பலருக்கும் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து பலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

chitra

இந்நிலையில் சித்ராவின் பெற்றோர்கள் மகளது சடலத்தை கண்டு கதறி அழுதுள்ளனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய சித்ராவின் தாய்,  “என் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. அவர் தைரியமான பொண்ணு, தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு அவள் அறிவுரை கூறுவாள்.எதற்கும் பயப்பட மாட்டாள். என் பொண்ணுக்கு எமனாய் வந்துட்டான். என் மகளது புகழுக்காகவும் பணத்துக்காகவும் அவரை கல்யாணம் பண்ணி, அடித்தே கொன்னுட்டாங்க. என் மகளின் சாவுக்கு பதில் சொல்லியே ஆகணும் என்று சித்ராவின் தாய் விஜயா கதறியுள்ளார்.