பாண்டவர் பூமி படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம்!

பாண்டவர் பூமி படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம்!


Pandavar boomi atress shamitha current status

2001 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான படம் பாண்டவர் பூமி. படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்திருப்பார். நாயகியாக ஷமிதா மல்னாட் நடித்திருப்பார். ஒரு குடும்பத்திற்காக வீடு கட்ட செல்வதும், அங்கு இருக்கும் பெண்ணுடன் நட்பு ரீதியாக காதலில் விழுவதும்தான் பாண்டவர் பூமி படத்தின் கதை.

படத்தில் வரும் தோழா தோழா தோல் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷமிதா. படத்தில் தனது அழகான நடிப்பால் அனைவரையும் பிரமிக்க வைத்திருப்பார் ஷமிதா.

arun vijay

பாண்டவர் பூமியை தொடர்ந்து ஒருசில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். அதனை தொடர்ந்து கன்னட படங்களில் பிஸியாக நடித்து வந்த ஷமிதா நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் சிவசத்தி என்ற தொடரில் நடித்தார். அதில் தன்னுடன் நடித்த பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஷமிதா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மௌவுன ராகம் நாடகத்தில் காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷமிதா.

arun vijay