பாகுபலி பிரபாஸ்க்கு இப்படியொரு பயமா? ஏர்போர்ட்டுக்கு எப்படி சென்றுள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!
பாகுபலி பிரபாஸ்க்கு இப்படியொரு பயமா? ஏர்போர்ட்டுக்கு எப்படி சென்றுள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!
இந்திய சினிமாவில் முக்கிய திரையுலக பிரபலமாக கருதப்படுபவர் பிரபாஸ். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகர் ஆவார். இப்படத்தின் மூலமே இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது மேலும் இவர் இளைஞர்களின் கனவுக் கண்ணனாக கொடிகட்டிப் பறக்கத் துவங்கினார்.பிரபாஸ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சீனாவில் வுஹான் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால் உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக முகத்தில் மாஸ்க் அணிந்து நடமாடி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபாஸ் ஈரோப் செல்வதற்காக ஹைதராபாத் ஏர்போர்ட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பாதுகாப்பு கருதி முகத்தில் மாஸ்க் அணிந்து சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.