மருத்துவமனையில் குழந்தையுடன் தவிக்கும் நிலானி!. பார்க்க கூட ஆளில்லாமல் பரிதாபம்!.

மருத்துவமனையில் குழந்தையுடன் தவிக்கும் நிலானி!. பார்க்க கூட ஆளில்லாமல் பரிதாபம்!.



Nilani admitted in hospital

 

சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் மனமுடைந்த காந்தி லலித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காந்தி லலித் தற்கொலை செய்து கொண்டதற்கு நிலானி தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் அவரோ நான் அவர் தற்கொலைக்கு காரணமில்லை என்று கூறினார். மேலும் இருவரும் படுக்கை அறையில் இருந்த புகைப்படங்களும் வெளியானது. இதுகுறித்து நிலானி கூறுகையில் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன்.

nilani sucide attempt

இதைத் தொடர்ந்து காந்தியின் சகோதரர் ரகுகுமார் தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு நிலானி தான் காரணம் என கூறியுள்ளார். அவருக்கு பல ஆண்களிடம் தொடர்பு இருக்கிறது. விரைவில் இது குறித்த ஆதாரத்தை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மனவேதனை  அடைந்த நிலானி விரக்தியடைந்து கொசு மருந்து குடித்து நிலானி தற்கொலை முயற்சித்துள்ளார். மயக்கமான அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.