இங்கேயும் வந்தாச்சா! வெளியான புகைப்படத்தால் ஜூலியை வச்சு செய்த நெட்டிசன்கள்!
இங்கேயும் வந்தாச்சா! வெளியான புகைப்படத்தால் ஜூலியை வச்சு செய்த நெட்டிசன்கள்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார் .
ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூலி அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
ஜூலி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூகவலைதளங்களிலும் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் அதற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிடுவர்.
இவ்வாறு சமீபத்தில் ஜூலி தனது ஷார்சாட் பக்கத்தில் தானே வடிவமைத்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டு,அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சுய விளம்பரம் செய்து கொண்ட ஜூலி தற்போது இங்கேயும் வந்துட்டாங்களா என்று நெட்டிசன்கள் கேலிசெய்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.