ரஜினியை ஓங்கி அறையனும்! தலைதெறிக்க ஓடிய நடிகர்கள்! முத்து படத்தில் ராஜா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்.
ரஜினியை ஓங்கி அறையனும்! தலைதெறிக்க ஓடிய நடிகர்கள்! முத்து படத்தில் ராஜா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்பாபு, மீனா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முத்து. இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளநிலையில் இந்த படத்தின் சில முக்கிய சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார் படத்தின் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.
இந்த படத்தில் ராஜாவாக சரத்பாபுவும், அவரிடம் வேலை செய்யும் வேலைக்காரனாக ரஜினியும் நடித்திருப்பார்கள். ராஜா வேடத்தில் சரத்பாபுவின் கதாபாத்திரமும், நடிப்பும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது. ஆனால் இந்த ராஜா வேடத்தில் நடிக்க முதலில் தேர்வானது சரத்பாபு இல்லையாம்.
நடிகர் அரவிந்தசாமிதான் ராஜா கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் படத்தில் ஒரு காட்சியில் ரஜினியை ராஜா அறைவதுபோல் ஒரு காட்சி வரும். ரஜினியை அறையும் காட்சியை தூக்கினாள் மட்டுமே தான் இந்த படத்தில் நடிப்பதாக அரவிந்த்சாமி கூறிவிட்டாரம். இதனை அடுத்து நடிகர் ஜெயராமை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
அவரும், தன்னால் ரஜினியை அரைவதுபோன்றெல்லாம் நடிக்க முடியாது. அந்த கட்சியை நீக்கினால் தான் நடிப்பதாக கூறியுள்ளார். அதன்பிறகுதான் நடிகர் ரஜினி சரத்பாபுவிடம் பேசி, அவருக்கு புரியவைத்து இந்த படத்தில் ராஜாவாக நடிக்க வைத்துள்ளார்.