பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்- திடீர் முடிவு காரணம் இவர்களா?

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்- திடீர் முடிவு காரணம் இவர்களா?



mathu-told-to-boys-i-am-just-reliving-in-this-house

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்றுடன் 51 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் இதுவரை 7 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே சீசன் 3 பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இதில் கவின், சாக்க்ஷி, லாஷ்லியாவின் முக்கோண காதல் கதை ஒருபக்கம் சுவாரசியமாக செல்ல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நடிகை வனிதா நேற்றைய முன் தினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார்.

big boss

இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றி அனைவரிடமும் கூறிய வனிதா இனி முகெனை நம்பாதே என்று அபிராமியிடம் கூறி முகேன் மற்றும் அபிராமி உறவில் விரிசலை ஏற்படுத்தினார். 

இன்று வந்த ப்ரோமோவில் மதுமிதா மற்றும் ஆண்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அப்பிரச்சனையில் மதுமிதா தான் வீட்டை விட்டு வெளியே போக உள்ளதாக கூறுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.