சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க மலேசிய இளம்பெண் செய்த செயல்.!

சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க மலேசிய இளம்பெண் செய்த செயல்.!


malasiya-girl-booked-full-ticket-to-see-master-movie

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கிறது விஜயின் மாஸ்டர் திரைப்படம். தமிழகம் மட்டுமின்றி பலநாடுகளிலும் இப்படத்தை திரையரங்குகளில் காண மக்கள் கூட்டம் இன்னும் அலைமோதிக்கொண்டு தான் இருக்கிறது.

 இந்நிலையில் மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண் ஒருவர் சென்னையில் மாஸ்டர் படத்தை பார்க்க மலேசியாவிலிருந்து சென்னை வர முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் சென்னை வரமுடியவில்லை. பின் நீண்ட நெடு முயற்சிக்கு பின் ஒருவழியாக சென்னை வந்துள்ளார் ஆஷ்லினா.

Malasiya girl

சென்னை வந்ததும் முதல் வேலையாக மாஸ்டர் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார். ஆனால் திரையரங்கில் அவருக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். அதனையடுத்து அண்ணாசாலையில் உள்ள ஒரு தியேட்டரில் உள்ள அனைத்து இருக்கையையும் முன்பதிவு செய்துள்ளார்.

150 இருக்கைகள் கொண்ட தியேட்டரில் தனது குடும்பதினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் விஜயை பார்த்து கத்தி கூச்சலிட்டு, ஆரவாரம் செய்துள்ளார்.

பின்னர் வெளியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முன்பு நின்று கத்திக் கூச்சலிட்டு விஜய் கத்துவதை போன்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ஆஷ்லினா.