இயக்குனர் பாலாவை மிஞ்சிய இயக்குனர்.. படப்பிடிப்பில் நடிகர்கள் மற்றும் துணை இயக்குனர்களை அடித்து உதைத்த மாரி செல்வராஜ்
இயக்குனர் பாலாவை மிஞ்சிய இயக்குனர்.. படப்பிடிப்பில் நடிகர்கள் மற்றும் துணை இயக்குனர்களை அடித்து உதைத்த மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனராக இருப்பவர் பாலா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர், நடிகைகள் ஆசைப்பட்டாலும் ஒரு பக்கம் பயந்து கொண்டே தான் நடிப்பார்களாம். அந்த அளவிற்கு நடிகை, நடிகர்களை படப்பிடித்தால் துன்புறுத்தி அராஜகமாக நடந்து கொள்வார்.
இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் மீது தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இது போன்ற நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வடிவேலு போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டனர் மாமன்னன் பட குழுவினர். இந்த பேட்டியில் மாரி செல்வராஜ் படக்குழுவினரை சரமாரியாக அடிப்பதாக உதயநிதி ஸ்டாலின் சிரித்துக் கொண்டே கூறினார். இதனை வடிவேலுவும் ஆமோதித்து தலையசைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வந்தது.
இதன்படி மாரி செல்வராஜ் இந்த குற்றச்சாட்டை ஒத்துக் கொண்டார். படப்பிடிப்பின் போது நடிகர்களை அடிப்பது உண்மைதான். அது தவறும் கூட, தன்னுடைய ஜாதியைப் பற்றி என்னுடைய அதிகாரத்தினால் தான் நான் இப்படி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பி வருகிறது.