அரைவேக்காட்டு மூளை.. கேலி செய்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு! ஏன்? என்ன நடந்தது?

அரைவேக்காட்டு மூளை.. கேலி செய்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு! ஏன்? என்ன நடந்தது?



Kushbu answerdnto netisan who tease her

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. மேலும் சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் நடிகரும், பிரபல இயக்குனருமான சுந்தர் சி அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

மேலும் ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் குடும்ப உறுப்பினர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகை குஷ்பூ  தன்னை தனிமைப்படுத்தி  கொண்டுள்ள கணவர் சுந்தர் சியை தூரத்தில் அமர்ந்து பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து, என்னுடைய கணவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகி வந்த பிறகு நான் இப்படிதான் அவரை பார்த்தேன். மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Kushbhu

அந்த புகைப்படம் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன் ஒருவர், இந்த 
புகைப்படத்தை எடுத்த நபர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லையா? என கிண்டலாக கேட்டுள்ளார். அதற்கு குஷ்பு, பாதி செய்தியை மட்டும் தெரிந்துகொண்டால் அரைவேக்காட்டு மூளை என்றுதான் அர்த்தம். என்னுடைய குடும்ப நபர்கள் 3 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் என பதிலடி கொடுத்துள்ளார்.

Kushbhu