நீங்க இப்படி செய்றது ரொம்ப தப்பு, ஒழுங்கா மாத்திக்கோங்க.. அதிரடியாக காயத்ரி விமர்சித்தது யாரை தெரியுமா ?

நீங்க இப்படி செய்றது ரொம்ப தப்பு, ஒழுங்கா மாத்திக்கோங்க.. அதிரடியாக காயத்ரி விமர்சித்தது யாரை தெரியுமா ?



kayathiri give suggestion to yashiya, ishwarya at twitter

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை  நெருங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி ஆகிய 6 பேர் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் 2  பேர் எலிமினேட் செய்யப்பட்டு  4 பேர் ஃபைனலுக்கு செல்லவுள்ளார்கள் . 

இவ்வாறுபோட்டிட்டிகள் கடுமையாகவும்,விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கும் இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தற்போது இரண்டு பிரிவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதாவது ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் பாலாஜி ஒரு புறமும், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் மற்றொரு புறமும் உள்ளனர்.

bigboss

இதில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து செய்யும் செயல்கள் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் எரிச்சலடைய வைக்கிறது.



 

இது பற்றி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், "தோழிகளாக இருப்பது சரி, ஆனால் நீங்கள் இருவரும் இப்படி கூட்டணி சேர்ந்து டாஸ்க் செய்வது சரியில்லை. அது  உங்களை பலவீனமாக காட்டுகிறது .நீங்கள் தனியாக இருக்கையில் மிகவும் பலமாக இருக்கிறீர்கள் , ஆனால் ஏன் பயப்படுகிறீர்கள்.அது மற்றவர்களையும் கெடுக்கும் வகையில் உள்ளது என கூறியுள்ளார். எனவே “உங்கள் உத்தியை  மாற்றிக்கொள்ளுங்கள்” என காயத்ரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.