அந்த மாதிரி காட்சியா? நோ நோ சொல்லும் பிரபல நடிகர்! இதான் காரணமா?
அந்த மாதிரி காட்சியா? நோ நோ சொல்லும் பிரபல நடிகர்! இதான் காரணமா?
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது முதல் படத்திலையே பிரபலமடைந்தவர் நடிகர் ஜெயம் ரவி. ரவி என்ற பெயரில் அறிமுகமான இவர் ஜெயம் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அதில் இருந்து ஜெயம் ரவி என எல்லோராலும் அழைக்கப்படுகிறார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் சிறப்பாகவும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
தனி ஒருவன் திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் முக்கியமான திருப்புமுனை என்றே கூறலாம். தற்போது கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம், அடங்க மறு. இந்த திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.
இந்த படம் பற்றி ஜெயம் ரவி பேசுகையில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு இப்போது கொடுக்கும் தண்டனை போதாது. இதைவிட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் வக்கிர ஆசாமிகளுக்கு பயம் இருக்கும். அது என்ன தண்டனை, எப்படி வழங்குவது என்பதை சொல்லும் படமாக, அடங்க மறு உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்களிடம் எனக்கு பேமிலி ஹீரோ இமேஜ் இருப்பதால், ஹீரோயினுடன் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். எப்போதும் அதை மீற மாட்டேன். அடுத்து காஜல் அகர்வாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். என் 25வது படம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.