பெரும் சோகம்.. துர்கா பூஜையில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிரை விட்ட பிரபல பாடகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பெரும் சோகம்.. துர்கா பூஜையில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிரை விட்ட பிரபல பாடகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!


Famous singer Murali muhabathra mysterious death

பிரபல பாடகர் முரளி முகபத்ரா மேடையில் பாடிகொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தயிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோராபூட் மாவட்டத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சியில் பாடுவதற்காக பிரபல பாடகர் முரளி முகபத்ரா அழைக்கப்பட்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நான்கு பாடலை பாடியபின் திடீரென நாற்காலியில் சரிந்து விழுந்தார்.

இதனைகண்டு அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

odisha

மேலும் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். அத்துடன் இவரின் மறைவுக்கு திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை பலரும் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து வருகின்றனர்.