திரையை மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்..!
திரையை மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்..!
கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகி தமிழகமெங்கும் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் டிமான்டி காலனி.
இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெருவாரியான வரவேற்பை பெற்றது. மேலும், படம் பேய் கதையை மையமாக வைத்து மிரட்டலுடன் நகர்ந்ததால் பலரும் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில், படத்தின் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் மீண்டும் உருவாகும் டிமான்டி காலனி 2 படத்தில் பிரியா பவானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.