சென்னை காவல் ஆணையரின் பாராட்டு மழையில்! விஸ்வாசம் படக்குழுவினர்.!

சென்னை காவல் ஆணையரின் பாராட்டு மழையில்! விஸ்வாசம் படக்குழுவினர்.!



chennai police commitioner sharavanan - visvasam movie

விஸ்வாசம் படத்தில் இடம்பெறும் காட்சிகளில் போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைபிடித்ததற்காக சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம். பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் என ஏற்கனவே மூன்று படங்களை கொடுத்த இந்த கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளது.

visvasam

இந்த நிலையில் படத்தைப் பார்த்த சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் படத்தை வியந்து பாராட்டியுள்ளார். படம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.