அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
தாறுமாறாக உயர்ந்து வரும் பணம்! எடுத்துக்கொண்டு வெளியேறப் போவது இவர்தானா.! தீயாய் பரவும் வீடியோ!!
தாறுமாறாக உயர்ந்து வரும் பணம்! எடுத்துக்கொண்டு வெளியேறப் போவது இவர்தானா.! தீயாய் பரவும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும். சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அமீர், நிரூப், ராஜு, சிபி, பவானி, பிரியங்கா, தாமரை ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் தற்போது பணப்பெட்டி டாஸ்க் கொடுத்துள்ளது. அதில் பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கும் போட்டியாளர்கள் செல்லலாம்.
ஆரம்பத்தில் மூன்று லட்சம் கொடுத்த நிலையில் அது படிப்படியாக உயர்ந்து தற்போது 11 லட்சத்தில் வந்து நிற்கிறது. இதுவரை அதனை எடுக்க போட்டியாளர்கள் யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் அமீர் அந்த 11 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவற்கு தயாராகுவது போல போட்டியாளர்களிடம் பேசியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.