அச்சச்சோ! பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக.. கோபமாக நடிகர் கமல் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

அச்சச்சோ! பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக.. கோபமாக நடிகர் கமல் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


bigboss-promo-video-viral-93dwmg

விஜய் தொலைக்காட்சியில் 16  போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 65 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.  

மேலும் இந்த வாரம் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபில்லா, ரமேஷ், சோம் என 6 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதில், வார இறுதியான இன்று கமல் போட்டியாளர்களை சந்தித்து பேசுகிறார். ஆரம்பத்திலேயே கோபமாக பேசும் அவர் ஜோடியா விளையாடினா,ஜோடியா வெளியே போக வேண்டிவரும், கூட்டமா விளையாடினா கூண்டோடு கைலாசம்முன்னு கேட்டபாடில்லை என பேசி இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று ஜித்தன் ரமேஷ் மற்றும் நாளை அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சியை விட்டு வெளியேறலாம் என தகவல்கள் பரவி வருகிறது.