அடக்கடவுளே.. பிரபல நாட்டுப்புற பாடகிக்கு இப்படியொரு பரிதாப நிலையா?.. மருத்துவர்களின் தவறால் பிறந்தவுடன் இறந்த குழந்தை..!!

அடக்கடவுளே.. பிரபல நாட்டுப்புற பாடகிக்கு இப்படியொரு பரிதாப நிலையா?.. மருத்துவர்களின் தவறால் பிறந்தவுடன் இறந்த குழந்தை..!!



Anitha kuppusamy reveals her son died

நாட்டுப்புற பாடல்கள் என்றாலே நமக்கு நினைவில் வருபவர்கள் குப்புசாமி - அனிதா குப்புசாமி ஜோடி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சென்று கச்சேரி நடத்தினார்கள்.  

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணமும் நடைபெற்று முடிந்தது. அனிதா குப்புசாமி சொந்தமாக யூடியூப் பக்கத்தையும் நிர்வகித்து வரும் நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த சோகம் குறித்து அவர் விவரித்துள்ளார். 

tamil cinema

இது குறித்து அவர் பேசுகையில், "என் முதல் மகள் பல்லவி பிறந்த பின் ஆண் குழந்தை வேண்டும் என்று அவ்வப்போது கடவுளிடம் வேண்டுவேன். ஆண் குழந்தையும் பிறந்தது. 

அறுவை சிகிச்சை முறையில் அழகிய ஆண் குழந்தை பிறந்து 24 மணிநேரத்திற்குள் இறந்து விட்டது. மருத்துவர்கள் தவறான ஊசி செலுத்தியதால் நெஞ்செல்லாம் எரிந்து அந்த குழந்தை இறந்தது" என அவர் கண்கலங்கி தெரிவித்தார்.