கிளப்புக்கு போன பிரபல நடிகை :பவுன்சரால் விரட்டி விடப்பட்ட சோக சம்பவம்!

கிளப்புக்கு போன பிரபல நடிகை :பவுன்சரால் விரட்டி விடப்பட்ட சோக சம்பவம்!



anaya-banda-club

 பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மும்பையில் உள்ள ஒரு கிளப்பிற்கு சென்றபோது அவரை உள்ளே அனுமதிக்கவில்லையாம். 

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா அப்பா வழியில் நடிக்க வந்துள்ளார். அனன்யா நடித்த முதல் படமான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 அண்மையில் வெளியானது. படத்தை பாராட்டுபவர்கள் பாராட்டினாலும் கலாய்த்தவர்கள் தான் அதிகம். அனன்யா அடுத்ததாக பதி பத்னி அவுர் வோ படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் கார்த்திக் ஆர்யன், புமி பெட்னேகர் ஆகியோரும் உள்ளனர். 

anaya  banda

அனன்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை லோயர் பரேலில் உள்ள கிளப் ஒன்றுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரை கிளப்புக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர் பவுன்சர்கள். 

anaya  banda

அதற்கு காரணம் அனனன்யா பாண்டேவின் வயது தானாம். அனன்யா அனன்யா சென்ற கிளப்பில் 24 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதியாம். அனன்யாவுக்கு 20 வயது தான் ஆகிறது. அதனால் இந்த கிளப்பிற்கு வரும் அளவுக்கு உங்களுக்கு இன்னும் வயது வரவில்லை என்று கூறி வாசலோடு அனுப்பி வைத்துவிட்டார்களாம். வேறு வழி இல்லாமல் அனன்யாவும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டாராம்