பயங்கர மாடர்னாக மாறியுள்ள அலெக்ஸ்பாண்டியன் பட நடிகை சனுஷா! வைரல் புகைப்படங்கள்.
பயங்கர மாடர்னாக மாறியுள்ள அலெக்ஸ்பாண்டியன் பட நடிகை சனுஷா! வைரல் புகைப்படங்கள்.
விக்ரம் நடித்த காசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சனுஷா. அதன்பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் நடிகை த்ரிஷாவிற்கு தங்கையாக நடித்தார். மேலும், நந்தினி, விமல் நடிப்பில் வெளியான எத்தன் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் சனுஷா.
பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய்பேச முடியாத பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார் சனுஷா. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த இவர் தமிழ் சினிமாவில்தான் ஹீரோயின் அவதாரம் எடுத்தார்.
ஒருசில தமிழ் படங்களுக்கு பிறகு ஹீரோயின் வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்துக்கு மூன்று தங்கைகளில் ஒருவராக ஸ்னேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை இவர் நடித்த அணைத்து படங்களிலும் பாவாடை, தாவணியில் மட்டுமே நடித்திருந்த நிலையில் முதல் முறையாக இவரது பயங்கர மாடர்னான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.