அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
இரண்டு நாட்கள் தூங்கவே இல்லை. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம். என்ன காரணம் தெரியுமா?
இரண்டு நாட்கள் தூங்கவே இல்லை. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம். என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆடல், பாடல், கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்திகேயனுக்கு தங்கையாக நடித்த நம்ம வீட்டு பிள்ளை படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தாவரவிட்டதை நினைத்து புலம்பி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி அவர் கூறுகையில் ஒரு படத்திற்கு சென்ற வருடம் கால் சீட் கொடுத்திருந்தேன். அவர்கள் திடீரென ஆகஸ்டில் கால் சீட் கேட்டுவிட்டார்கள்.
மேலும் நான்கு படங்களில் நான் ஒப்பந்தம் ஆகியிருந்தேன். அதனால் தேதி பிரச்சனையால் இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.
மேலும், சினிமா பின்னணி இல்லாமல் திரை உலகிற்குள் வந்த எனக்கு ஷங்கர் சார், கமல் சாறுடன் நடிக்கும் வாய்ப்பும் வந்தும் அதை தவறவிட்டது மிகப்பெரிய வருத்தம் என்றும், அதனால் இரண்டு நாட்கள் தூக்கமே வரவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.