அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
என்னது.. நடிகை யாஷிகாவிற்கு திருமணமாகிருச்சா! இளம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படங்கள்!
என்னது.. நடிகை யாஷிகாவிற்கு திருமணமாகிருச்சா! இளம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை யாஷிகா அவ்வப்போது வித்தியாசமான, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். மேலும் யாஷிகாவின் கைவசம் தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா ஆகிய படங்கள் உள்ளன.
More pics from the Pooja & Launch of @iam_SJSuryah - @iamyashikaanand starrer #KadamaiyaiSei@Pro_Bhuvan pic.twitter.com/xEoSg2iJFH
— Kaushik LM (@LMKMovieManiac) February 1, 2021
அதனை தொடர்ந்து நடிகை யாஷிகா வெங்கட் ராகவன் இயக்கும் கடமையை செய் படத்தில் எஸ்.ஏ.சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது யாஷிகா அசத்தலான புடவை அணிந்து நெற்றி வகிடில் குங்குமம் வைத்து வந்திருந்தார். இதனை கண்டு நெட்டிசன்கள் என்னது யாஷிகாவிற்கு திருமணமாகிருச்சா என அதிர்ச்சி அடைத்துள்ளனர். இதற்கு சிலர் இது படத்திற்கான கதாபாத்திரமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.
இவ்வாறு இதற்கு முன்பு சனம் ஷெட்டி நெற்றி வகிடில் குங்குமம் வைத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டததற்கு இது கர்நாடகாவின் சம்பிரதாயம். அங்கு திருமணமாகாதவர்கள் கூட நெற்றி வகிடில் பொட்டு வைப்பார்கள் என கூறியிருந்தார்.