புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தற்போது மிகப்பெரிய நடிகை! யார் தெரியுமா?

புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தற்போது மிகப்பெரிய நடிகை! யார் தெரியுமா?


actress-tapsee-childhood-photo

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குவிந்தன. வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார்.

பின்னர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2  படத்தில் நடித்திருந்தார் டாப்சீ. மும்பையில் பிறந்த இவர் சினிமாவில் முதல் முதலில் அறிமுகமானது 2010 ஆம் ஆண்டு வெளியான “ஜும்மாண்டி நாடம் ” என்ற படத்தில் தான்.

TAPSEE

தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான “வை ராஜா வை” என்ற படத்திற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தனது வண்டியை பாலிவுட்டிற்கு திருப்பி விட்டார் டாப்ஸி. அங்கே அம்மணிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் காத்துக் கொண்டிருந்தது, தற்போது இந்தியில் மட்டும் 4 பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் நடிகை டாப்ஸி. 

தனது சிறுவயதில் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை டாப்சீ.