விவகாரத்துக்கு பின் மனவேதனையில் சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க! வைரலாகும் புகைப்படம்...
விவகாரத்துக்கு பின் மனவேதனையில் சமந்தா என்ன செய்துள்ளார் பாருங்க! வைரலாகும் புகைப்படம்...
தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமந்தாவிற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் அண்மையில் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்துக்கு பிறகு தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் அனைவர்க்கும் அறிவுரை கூறும் வகையில் தற்போது பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நமது வாழ்க்கை துணையை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், இந்த ஒரு முடிவில் தான் நம் வாழ்க்கையே மாறும். நம்ம வாழ்க்கைல 90% சந்தோஷமாக இருக்கப்போறமா? இல்ல கஷ்டப்படப்போறமா? என்பதை இந்த முடிவு தான் தீர்மானிக்கும்". என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு..